கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட அனர்த்தம்
சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)





