இலங்கை

இலங்கை : வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் கடுமையாகும் சட்ட நடவடிக்கை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அவ்வாறு போலி முகவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு மீள பெற முடியாதவர்கள் போதியளவு ஆதரமின்மையால் பொலிஸாரை நாட முடியாத நிலையும் உள்ளது. இதனால் அவர்கள் செலுத்திய பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடுகின்றனர்.

குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிட வலியுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் குறித்த முகவருக்கு உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பு நிறுவனமா என்பதை இதனூடாக கண்டறியமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடுவோர் 1989 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content