இலங்கை

தொடரும் சுகாதார வேலைநிறுத்தம் : நிதி அமைச்சருடன் முக்கிய சந்திப்பு

சுகாதாரத் தொழிற்சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எனினும் நிதி அமைச்சருடனான மீண்டுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெறும் வரை தொடர்ந்தும் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுளளது.

இதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நிதியமைச்சருடன் திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான சந்திப்பு வரை சுகாதார வேலைநிறுத்தம் தொடரும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பினால் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இக்கலந்துரையாடலின் முன்னேற்றத்திற்கு அமைய அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்

தற்போதைய வேலைநிறுத்தத்தில், சுகாதார சேவைகளை இலகுபடுத்துவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!