அறிவியல் & தொழில்நுட்பம்

இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் குறித்து வெளியான தகவல்

இன்றைய இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றாக யூடியூப் திகழ்கிறது.

இன்றைய சமூகத்தில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகின்றன. வயது வரம்பு இன்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் சமூக ஊடகங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சமூகத்தில் சமூக உரையாடல்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. அதே சமயம் டிஜிட்டல் உரையாடல்கள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு சமூகத்தின் முக்கிய அங்கமாக மாறிப்போன சமூக ஊடகங்களில் அதிக பயனாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு முதல் இடத்தில் உள்ள சமூக ஊடகம் யூடியூப் ஆகும் என்று பியூ ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இளம் வயதினரை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, இன்றைய இளம் வயதினர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகமாக யூடியூப் விளங்குகிறது. யூடியூபினுடைய பயன்பாடு 2023 ஆம் ஆண்டில் 71 சதவீதம் இருக்கிறது. மேலும் யூடியூபை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பயனாளர்களுடைய எண்ணிக்கை 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

19 சதவீத மக்களால் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது. தினசரி தொடர்ச்சியாக 3 சதவீதம் பேர் மட்டும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இளம் வயதினர் பயன்படுத்தும் முக்கிய சமுக ஊடகங்களில் ஒன்றாக டிக் டாக் உள்ளது. இது 17 சதவீத பயன்பாட்டாளர்களை கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் 14 சதவீத பயன்பாட்டாளர்களை கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபர்களுடைய எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஸ்னாப் சார்ட்டை 8 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர்.

எக்ஸ் தளத்தினுடைய பயன்பாடு 2023 ஆம் ஆண்டில் பெருமளவில் பின்னடைவு சந்தித்திருக்கிறது. அதற்கு அந்த நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் 60 சதவீத மக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்கை தொடங்கி பயன்படுத்தும் நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content