ஆப்பிரிக்கா

காங்கோவில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

கிழக்கு காங்கோவில் தெற்கு கிவு பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காங்கோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது.

முவெங்கா பிரதேசத்தில் உள்ள பர்ஹினி பகுதியில் கடந்த வியாழக்கிழமை,  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதாகவும், அப்பகுதியிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

தலைநகர் கின்ஷாசா, காங்கோ ஆற்றின் கரையோரம், கசாய் மாகாணத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் நேற்று (29.120 வெள்ளம் ஏற்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!