இலங்கை

இலங்கை – பதுளையில் காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பதுளையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மாணவி தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாயும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தனது 70 வயது பாட்டியுடன் அவர் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுமார்  ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது 20 வயது காதலன் முச்சக்கரவண்டியில் வந்து பதுளை சருங்கல் கந்தவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  குறித்த தினத்தில் பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அங்கு குற்றம் நடந்ததாக தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரியவந்துள்ளது. வீட்டிற்கு வந்த  பாடசாலை மாணவி தனது பாட்டி சாப்பிட்ட மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை நேற்று (06.12) கைது செய்த பதுளை பொலிஸார் இன்று (07.12)நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!