ஆசியா

சிங்கப்பூரில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களால் கடும் கோபத்தில் பெண்

சிங்கப்பூரில் உள்ள Punggol Plazaவில் அமைந்துள்ள McDonald’s உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பெண் ஒருவர், இறைச்சி சேர்க்கப்பட்ட பர்க்கர்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்பு, அதனை சாப்பிட முயன்ற போது, இறைச்சி சரியாக வேகாமல் இருந்துள்ளதையும், பர்க்கர் சரியாக சமைக்கப்படாமல் இருந்துள்ளதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து அந்த பெண், 04- ஆம் திகதியன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் மேனேஜர், சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்தார்.

“நீங்கள் வாங்கிய பர்க்கருக்கான முழு தொகையும் திருப்பி வழங்கப்படும். ஏற்கனவே வாங்கி சாப்பிட்ட பர்க்கரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அதற்கான செலவையும் நாங்களே ஏற்கிறோம். இதுப் போன்று இனி நடக்காது” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இந்த சலுகையை ஏற்க மறுத்த பெண், சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு (Singapore Food Agency) இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!