மத்திய கிழக்கு

காஸா மருத்துவமனையில் தாக்குதல் – மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் காஸாமீது நடத்திய தாக்குதல்களில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டிவிட்டது.

காஸா சுகாதார அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இதுவரையில்லாத அளவு நேற்றிரவு இஸ்ரேலிய ராணுவம் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியது.

காஸா சிட்டியின் அல் ஷிஃபா (Al-Shifa) மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஸாவில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அவசர மருத்துவ வாகனங்களை அழைக்க இயலவில்லை. கழுதைகள் பூட்டப்பட்ட வண்டியில் காயமடைந்தோர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காஸா வட்டாரத்தை இரண்டு துண்டுகளாக்கி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. காஸாவில் மனிதநேயப் பணிகளைத் தொடர உடனடிப் போர் நிறுத்தம் தேவை என்று ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோரை ஹமாஸ் குழு பிணை பிடித்துச் சென்றது.

அவர்களை மீட்பதற்காக சுமார் ஒரு மாதமாக இஸ்ரேல் காஸாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content