இலங்கை செய்தி

காஸாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்

காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி நாவலகே பெனட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக் குவழங்கிய நேர்காணலில், காஸாவில் உள்ள மக்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்திடம் குறிப்பிட்ட தகவல்கள் இருப்பதாக பலஸ்தீனத்துக்கான அவர் தெரிவித்துள்ளார்.

எகிப்து நோக்கிய ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்ட போதிலும், காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் இன்னும் அதன் வழியாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

அங்குள்ள 17 இலங்கையர்களையும் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னரே அழைத்து வர முடியும் எனவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!