மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரேரணை குறித்து வெளியான தகவல்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேமசிங்க சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய தற்போது மின்கட்டண முறைமையிலும் சமீபத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)