தமிழ்நாடு

காஞ்சிபுரம் – மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் சேர்ந்த இளைஞருக்கு அடி உதை

காஞ்சிபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த இளைஞருக்கு அடி உதை களக்காட்டூர் ஊராட்சியில் பரபரப்பு.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூர் ஊராட்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த திமுக பாமக வில் இருந்து 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பல்வேறு இளைஞர்கள் அதிமுகவில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு பல்வேறு பொறுப்புகள் வழங்கி அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு முன்பு திமுக இளைஞரணியில் இருந்து விலகி பாரதி என்கின்ற இளைஞர் அதிமுகவில் இணைந்து இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணைச் செயலாளர் பதவி வழங்கி பல்வேறு பணிகளை களக்காட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் மேற்கொண்டு வந்தார்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக இளைஞரணியை சேர்ந்த யுவராஜ், மணிகண்டன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் பணியாற்றியிருந்த பாரதியை திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தது மட்டும் இல்லாமல் அவற்றில் பொறுப்பையும் வாங்கி இளைஞர்களை அதிமுகவில் இணைக்க உறுதுணையாக இருந்ததால் இனிமேல் இச்செயலை செய்தால் மிரட்டும் தோரணத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல் அடிதடியில் ஈடுபட்டு பாரதி முகத்தில் பெருங்காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் களக்காட்டூர் ஊராட்சி பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவில் இருந்து மாற்று கட்சிக்கு செல்லும் இளைஞர்களை மிரட்டும் தோரணையிலும், சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்தி வருவதை அதிமுக சார்பில் தனது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content