இலங்கை

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : மேலும் ஒரு இலங்கையரையும் காணவில்லை!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) நேற்று (08.09) தெரிவித்தது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மோதல் சூழ்நிலை காரணமாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், 0094 – 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல் தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், யாரேனும் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் பற்றிய தகவல்களைத் தேட வேண்டியிருந்தால், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் தகவல்களைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content