இலங்கை

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : இருவர் வைத்தியசாலையில்!

வவுனியா – கனகராஜன் குளப்பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் இராணுவத்தினருக்கும், மீனவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக விலைக்கோரல் அடிப்படையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கரப்புக்குத்தி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப் போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  குளத்தினை  குத்தகைக்கு எடுத்தவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்திற்கு தெரியப்படுத்தி இருந்தனர். எனினும் இராணுவத்தினர் தொடர்ந்து மீன்பிடித்து வந்துள்ளனர்.

இதனையறிந்த குளத்தை குத்தகைக்கு எடுத்த நபரும் அவரது நண்பரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இராணுவத்தினர் மீன்பிடிப்பதை தடுத்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட கைகலப்பில் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (29) எனும் இளைஞன் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தை சேர்ந்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content