இந்திய இராணுவம் மீண்டும் வடக்கில்…? சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/army-jpg.webp)
இந்திய இராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான பின்னணியை உருவாக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதனை இலங்கை அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தெரிவித்தார்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதன் முடிவுகள் ஆபத்தானதாக அமையும் என எம்.பி அங்கு தெரிவித்தார்.
ஏதேனும் போராட்டச் சூழல் ஏற்பட்டால், அந்த மாகாணங்களில் மீண்டும் நிலைநிறுத்த இந்திய இராணுவத்துக்கு அதிகாரமும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியப் படையினர் வந்தால், அவர்களைத் திருப்பி அனுப்புவது இலகுவானதாக இருக்காது எனவும் எம்.பி மேலும் தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)