இலங்கை

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து குறித்த விலை உடனடியாக அமலுக்கு வரும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (25.08)  இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதுடன், உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!