இலங்கை

ஆனமடுவ பகுதியில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதிகள் இருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனமடுவ பரமகந்த சந்திக்கு அருகில் நேற்று (24.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் பின்னர் பிரதேசவாசிகள் லொறிகளில் சிக்கி படுகாயமடைந்த சாரதிகளை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!