இலங்கை

எக்ஸ்பிரஸ் கப்பல் குறித்த விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு கோரிய வழக்கை ஒக்டோபர் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்க்பபட்டுள்ளது.

இது குறித்த உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  சுற்றாடல் ஆர்வலர் கலாநிதி அஜந்த பெரேரா மற்றும் பலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்தால், நாட்டின் கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மேலும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட சேதம் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவனமும் தொடர்புடைய காப்புறுதி நிறுவனங்களும் இதுவரை நட்டஈட்டை செலுத்தத் தவறியுள்ளதால், நட்டஈட்டை வழங்குவதற்கு உரிய தரப்பினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!