ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள LNG ஆலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ஐரோப்பாவிற்கு LNG எரிவாயுவை பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் ஆலையாக இது கருதப்படுகிறது.

வேலை நிறுத்த எச்சரிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் எரிவாயு விலை நேற்று சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மேலும் 02 LNG ஆலைகளும் இந்த வேலைநிறுத்தத்திற்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக உள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

உலகின் 10 வீதமான LNG விநியோகம் இந்த 03 ஆலைகளினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!