இலங்கை

சரியான அறிவித்தல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை – அமைச்சரின் குற்றச்சாட்டு!

இம்முறை பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க நேரிடும் என்ற செய்தியை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தமைக்கு  சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் எந்தவொரு துறையிலிருந்தும் விவசாயிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே அந்த மக்களுக்கு விவசாய அமைச்சினால் உர விநியோகத்திற்காக பெருமளவிலான நிதி மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்காதமைக்கு  விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகார சபை, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content