இலங்கை

இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

வெளிநாட்டு உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்  சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ‘கட்டுமானத் தொழில் புத்துயிர் தொடர்பான செயற்குழு’ நேற்று (03.08) கூடிய நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட டஅவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் வெற்றியினால் அந்த செயற்பாடுகளை மும்முரமாக செயற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு  சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கட்டடம் கட்டுபவர்களுக்கு அரசினால் செலுத்தப்பட வேண்டிய மூன்று மாத கால நிலுவை பில்கள் இம்மாதத்திற்குள் தீர்க்கப்படும் என கட்டுமானத் தொழில் மறுமலர்ச்சி செயற்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிடப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!