இலங்கை

சர்ச்சைகளுக்கு மத்தியில் வேலனை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக கடமையேற்ற கஸ்ரன் றோய்

சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை நேற்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை சார்ந்தவரை நியமிக்காதே என கடந்த வாரம் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

அதனை அடுத்து குறித்த விடயம் பேசுபொருளாகி இருந்தது. மத வாதங்களை முன் வைக்காதீர்கள் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் , பாடசாலையின் பாரம்பரியத்தை மீறி அதிபர் நியமனம் நடைபெற்றதாக பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை முன்றலில் மாணவர்கள் சிலரும் அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி இருந்தனர்.அந்நிலையிலையே புதிய அதிபராக கஸ்ரன் றோய் கடமையேற்றுள்ளார்.

(Visited 32 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்