இலங்கை

இலங்கை காணாமல் போன தாய் மகள் மீட்பு – கணவரின் விபரீத முயற்சி

ஹேவாஹெட்ட – ரஹதுங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த தாயும், மகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

22 வயதுடைய தாயும் அவரது ஒன்றரை வயது மகளும் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் அவிசாவளை, கலபலன கந்த, மாணிக்காவ பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கணவரினால் தொல்லை ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி குறித்த யுவதி தமது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த யுவதியின் கணவர் நேற்று முன்தினம் மதியம் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தனர்.

இந்த நிலையில், அவர் தற்போது ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!