ஐரோப்பா

இஸ்ரேல் சோதனைச்சாவடி மீது தாக்குதல்; ஆயுதக்குழுவினர் மூவர் சுட்டுக்கொலை

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

Israeli forces kill three Palestinians in occupied West Bank |  Israel-Palestine conflict News | Al Jazeera

இதனிடையே, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் நப்லஸ் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதிக்கு காரில் வந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை குறிவைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

See also  சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் - பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கருத்து!

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மோதலில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content