இலங்கை செய்தி

பிள்ளையை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்த தாய் மீது கொடூரமாக தாக்குதல்

பிள்ளையை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவரை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண்ணின் கணவர் சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்ததாகவும், தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!