இலங்கை

கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் பெரிடோனிட்டிஸ் நோயை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தில் துகள்கள் கலந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (15.07) நேற்று கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவுக்கு விஜயம் செய்ததாகவும் மடிவத்த தெரிவித்துள்ளார்.

குறித்த திரவத்தை பாவனையிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்