இலங்கை

ஆய்வக எலியாக மாறிய மக்கள் : பல உயிரிழப்புகள் பதிவாகும் என எச்சரிக்கை!

கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கு பதிவு செய்யப்படாத 785 வகையான மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யார் சிகிச்சை எடுத்தாலும் நோயாளிகள் பலர்  உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

புதிய மருந்துகளை ஆர்டர் செய்வதற்கு கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிவித்த அவர்,  அதுவரை இறக்குமதி செய்யப்பட்ட குறித்த மருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் சுகாதார அமைச்சராக இருந்த போது வருடத்தில் ஏழு மருந்துகளை கூட இறக்குமதி செய்யவில்லை எனவும், வரலாற்றில் இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சில மருந்து வகைகளின் பொதிகளைப் பார்க்கும்போது சில வைத்தியர்கள் தமக்கு தொலைபேசியில் அழைத்து அவை வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ தயாரிக்கப்படுகின்றன எனத் தெரிவிப்பதாகவும் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!