ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள வன்முறைகள் – கட்டுப்படுத்த போராடும் அரசாங்கம்

பிரான்ஸில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து அங்கு 6ஆவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன.

வன்முறைகளை நிறுத்துமாறு உயிரிழந்த இளைஞரின் பாட்டி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரான்ஸில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தமது அமைச்சரவையிடம் கூறியுள்ளார்.

அவர் நாடாளுமன்றத் தலைவர்களையும் ஆர்ப்பாட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் 220க்கும் அதிகமான மேயர்களையும் சந்திக்கவுள்ளார். நேற்றிரவு மக்ரோன் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார்.

நாட்டின் கொந்தளிப்பான சூழலைக் கையாள வேண்டியிருப்பதால் அவர் ஜெர்மனிக்கான தமது அதிகாரத்துவப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!