இலங்கை

ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடற்ற வழிமுறைகளின் ஊடாக கிடைக்கும் தடுப்பூசி குறித்து அறிவுறுத்தல்!

கட்டாய மெனிங்கோகோகல் தடுப்பூசி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடற்ற வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசியான ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்காக வழங்கப்படுகிறது. இலங்கையில் இந்த தடுப்பூசி கையிருப்பில் இல்லை என அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த தடுப்பூசியானது கட்டுப்பாடற்ற வழிமுறைகள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு தற்போது சில நிறுவனங்களால் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த தடுப்பூசி ஆண்டு முழுவதும் செலுத்தப்படும் மருந்து அல்ல எனத் தெரிவித்த அவர், ஹஜ்ஜுக்கு புறப்படும் இலங்கை யாத்ரீகர்களுக்கு இது ஒரு பருவகாலத் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், இது தற்போதைய சூழ்நிலையில், போதைப்பொருள் மாஃபியாவுக்கு லாபம் ஈட்ட வழிவகை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் இலங்கை யாத்ரீகர்களுக்கு அரசாங்கம் மாற்று வழியை வழங்க வேண்டும், எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்