இலங்கை

சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஏப்ரல் 25ஆ ம் திகதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் இவ்வாறு இன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து புகையிரத பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை பொலிஸார் , பூக்கடை காவல் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்