இலங்கை

கடற்கரைக்கு நீராட சென்றிருந்த 11 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை

களுத்துறை கடற்கரைக்கு பெரியவர்களுடன் நீராடுவதற்காகச் சென்றிருந்த 11 வயது சிறுவன் கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

நேற்று (17) காலை பெரியவர்கள் சிலருடன் நீராடச் சென்ற அந்த சிறுவன் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு, களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஒருவர் அச்சிறுவனை கொண்டு செல்ல முற்பட்டபோதே, முச்சக்கர வண்டி சாரதிகள், அந்த நபரிடமிருந்து சிறுவனை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில், சிறுவனின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்