பெரும் மோதல் காரணமாக வின்னிபெக்கிற்கு மேற்கே நெடுஞ்சாலை 1 மூடப்பட்டது

வின்னிபெக்கிற்கு மேற்கே நெடுஞ்சாலை 1, மானிடோபாவின் கார்பெரிக்கு அருகில் பல உயிரிழப்பு சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு வியாழக்கிழமை முற்றிலும் மூடப்பட்டது.
“மிகவும் தீவிரமான மோதல்” இடத்தில் இருப்பதாகவும், நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது என்றும், வாகன ஓட்டிகள் வழியில் அவசர வாகனங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பேருந்து மற்றும் டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இதில் 17 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்காக காரணம் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)