இலங்கை செய்தி

இலங்கையில் பொறுப்பில்லாமல் செயல்படும் ஊடக நிறுவனங்கள்!! அமைச்சர் சாடல்

இலங்கையில் பல ஊடக நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை நாட்டுக்கு பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (15) நெலுவ – மண்டல்புர ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்கள் சுய தணிக்கையுடன் நாட்டின் நலனுக்காக பொறுப்புடன் செயற்படுவதாகவும், இலங்கையில் ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்படாதது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை ஊடக நிறுவனங்களின் சில செய்திகளால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட தேசியப் பத்திரிகை ஒன்று குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தரவுகளின் அடிப்படையில் இல்லாமல் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தச் செய்தி பொய்யானது என்றும், இலங்கையில் சிறுவர் தொழிலாளர் தொடர்பில் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றும், உலகளவில் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டாலும், இவ்வாறானதொரு பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பது பொருத்தமற்றது எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 58 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை