ஐரோப்பா

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் ஓய்வூதியம் தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விஷேட சலுகை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் எவர் ஒருவர் தனது உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அவர் தனது ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே குறித்த ஓய்வு ஊதிய தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு 7ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து எவர் ஒருவர் தனது உடல் பாதிப்பின் காரணமாக ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே ஓய்வு ஊதியத்தை பெறுவதாக இருந்தால் இந்த தொகையானது அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு 7ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து எவேட் விண்டர் என்று சொல்லப்படுகின்ற ஓய்வு ஊதியத்தை பெறுகின்றவர்களுக்கு மாதாந்தம் தலா 70 யுரோக்கள் உயர்வாக வழங்கப்படும் என்று தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டினுடைய புதிய சட்டத்தின் படி 3 மில்லியன் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கும் மேலதிகமான பணம் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் உடல் உபாதைகளுக்கு உள்ளானவர்கள் தங்களது வாழ்க்கை செலவை ஈடுசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!