இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!
இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே புதியவர் பதவியேற்றுள்ளார்.
ஜெனரல் ராஜா சுப்பிரமணி , தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார்.
ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் திகதி ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா நிலவரங்களை இவர் நன்கு அறிந்தவர் என்பதால், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





