அடங்க மறுக்கும் இஸ்ரேல்: அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு பிரான்ஸ் அழைப்பு!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் லெபனானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைக் கைப்பற்றியதோடு, அந்நாட்டின் எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி வருவதை பிரான்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிற்கும் தற்காப்பு உரிமை உண்டு என்பதை அங்கீகரித்தாலும், லெபனான் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை பிரான்ஸ் தற்போது கோரியுள்ளது.





