இலங்கை செய்தி

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலிட பல நாடுகள் விருப்பம்!

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டம், மத்தலவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதற்கான விரும்பும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலங்கை அரசாங்கம் கேள்விப்பத்திரங்களைக் கோரியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரம்பத்தில் 47 தரப்பினர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதாகவும், அவர்களில் மத்திய கிழக்கைச் சேர்ந்த சில நன்கு அறியப்பட்ட நிறுவனங்களும் அடங்குவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!