அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பி. தீவிரவாதியா? சர்ச்சையைக் கிளப்பும் தேரர்!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வைத்தியரா அல்லது தீவிரவாதியா என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள் என அர்ச்சுனா தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

” கச்சத்தீவு மீளப்பெறப்படும் என விஜய் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நாம் அன்று கதைக்க முற்படும்போது, ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்று, அதனை வழங்கமாட்டோம் என உறுதியளித்தார்.

ஆனால் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் வழங்குமாறு அர்ச்சுனா குறிப்பிடுகின்றார்.

அர்ச்சுனா வைத்தியரா, கொள்ளையரா, தீவிரவாதியா? டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப இந்நாட்டை ஆள முடியாது.

சிங்களவர்களின் பொறுமையை சோதிக்க முற்பட வேண்டாம் என தளபதிக்காக பேசும் அரசியல்வாதிகளுக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.’ என்றார் பத்தரமுல்ல சீலரத்ன தேரர்.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!