இலங்கை செய்தி

உலக அமைதிக்கான நடை பயணத்தில் பிரதமர் பங்கேற்பு!

உலக அமைதியை வலியுறுத்தி “அமைதிக்கான நடைபயணம்” எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை முன்னெடுக்கப்படும் இந்த அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று (ஏப்ரல் 24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணத்தின் மூன்றாம் நாள் பயணம், மாவனல்லை – பெலிகம்மன வித்தியாவர்த்தன பிரிவேனா போத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!