இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.கட்டளைத் தளபதி!

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்று காலை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், ஆளுநருடன் அவர் மேற்கொண்ட முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பு இதுவாகும்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இருவருக்குமிடையே சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் நவரத்னவுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சந்திப்பின் நினைவாக ஆளுநருக்குப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சிவில் நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்று அறியமுடிகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!