உலகம் செய்தி

தாக்குதலுக்கு இலக்கான ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உயிரிழப்பு!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார்.

ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

ஏப்ரல் முதலாம் திகதி தெஹ்ரானில் உள்ள அவரது வீடுமீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையிலேயே தற்போது அவரும் உயிரிழந்துள்ளார்.

1997 முதல் 2005 வரை ஈரான் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியதோடு, ஈரானின் உச்ச தலைவருக்கு ஆலோசகராகவும் மற்றும் மூலோபாயக் குழுவின் தலைவராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஈரானிய அரசியலில் ஒரு சீர்திருத்தவாதப் போக்கைக் கொண்ட தலைவராக இவர் பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!