மண்மேட்டில் மோதி பேருந்து விபத்து! மாணவன் பலி: பலர் படுகாயம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கெலிங்கந்த கொலனி அகலவட்டியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மதுகம டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து கெலிங்கந்தவிலிருந்து மதுகம நோக்கிப் பயணித்து மஹேலி எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள அணையில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் விபத்து தொடர்பில் பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)





