வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது RCB!
IPL T-20 தொடரில் நேற்று (29) நடைபெற்ற முதலாவது போட்டியில் Royal Challengers Bengaluru அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த RBC அணி.
இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Sunrisers Hyderabad
ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அணியின் தலைவர் இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசி அணியை மீட்டார்.
அவருக்குத் துணையாக அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
202 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
இன்றைய ஆட்டம்
இன்று (29) நடைபெறும் போட்டியில் Mumbai Indians , Kolkata Knight Riders ஆகிய அணிகள் மோதுகின்றன.





