துபாயில் உக்ரைனினில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை தாக்கியது ஈரான்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள உக்ரைனுக்குச் சொந்தமான தற்காலிய ஆயத கிடங்கு ஈரான் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஈரானின் உயர்மட்ட ராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் நோக்கில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை சேமித்து வைத்திருந்த இடத்தையே ஈரான் குறிவைத்துள்ளது என தகவல் வெளியாகிள்ளது.
இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த 21 உக்ரைனியர்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஈரான் மற்றும் உக்ரைன் இடையிலான இந்த ராணுவ மோதல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.





