ஈரான் விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விசேட கூட்டம்!
ஈரானிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (27) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என தெரியவருகின்றது.
தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.
ஈரானின் தற்போதைய பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





