அபுதாபி தாக்குதல் – உயிரிழந்தோர் பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டினர் என உறுதி
அபுதாபியில் இடைமறிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சிதறல்களில் உயிரிழந்த இருவர், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாட்டினரைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது அவர்கள் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.





