காலம் முடிவதற்கு முன் செயல்படுங்கள் – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட தொடர்ச்சியான பதிவில், ஈரானின் பேச்சுவார்த்தையாளர்களை “மிகவும் வித்தியாசமானவர்கள்” மற்றும் “விசித்திரமானவர்கள்” என்று அவர் விமர்சித்தார்.
மேலும், அவர்கள் அமெரிக்காவிடம் ஒப்பந்தத்திற்காக “கெஞ்சுகிறார்கள்” என்றும், ஈரானின் இராணுவம் “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என்றும் அவர் கூறினார்.
அவர்கள் பொதுவாக “எங்கள் முன்மொழிவை பரிசீலித்து வருகிறோம்” என்று கூறுவது தவறு என்றும், “காலம் கடப்பதற்குள் அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் இல்லையெனில் பின்வாங்க வழியே இருக்காது” என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
இதனிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தற்போதைக்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
நட்பு நாடுகள் வழியாக தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தாலும், அவை அதிகாரப்பூர்வ உரையாடல்கள் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.





