ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த தாய்லாந்து எண்ணெய் கப்பல்
தாய்லாந்து எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்றதாக
பாங்சாக் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தியுள்ளது.
தாய்லாந்து மற்றும் ஈரான் இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்து.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ, கப்பல்களின் பாதுகாப்பான
பயணத்தை உறுதிசெய்ய ஈரான் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கப்பல்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவித்து, பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.





