மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம்?
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமது நாடு மத்தியஸ்தம் வகிக்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
எனவே, இரு நாடுகளும் சம்மதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், இந்த கருத்துக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் பதிலளிக்கப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு நட்புறவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.





