அரச சேவை: அமைச்சரவைக்குழு கூடி ஆராய்வு!
அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையை தொடர்ச்சியாக பேணுவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் குழு கவனம் செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்துக்கொள்வதற்கும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.





