இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட் அமைப்பிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட உளவாளிக்கு ஈரானில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் தேசிய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டு போரின் போது (12 நாள் போர்) ஈரானின் முக்கிய பாதுகாப்பு இடங்களை படமெடுத்து அவர் வெளிநாட்டிற்கு அனுப்பினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகள் இரகசிய பயிற்சி பெற்ற பின்னரே அவர் இந்த உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவீடனில் ஒரு இணைய விளம்பரத்தை சொடுக்கியதன் மூலமே அவர் இஸ்ரேலிய அதிகாரிகளால் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.





